வாஸ்து என்றால் என்ன?


பகவான் நாராயணனின் அம்சம் தான் இந்த வாஸ்து புருஷன். வாஸ்து என்றால் பொருட்கள் என்று பொருள்(மனிதர்கள் உட்பட). எனவேதான் வாஸ்து முறைகளின் படி வீடு மற்றும் மனைகளை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்க பெறுகிறோம். நமக்கு வரும் நன்மை தீமைகள் யாவும் நமது வீட்டின் அமைப்பை பொறுத்தே அமைகிறது எனலாம். வாஸ்து என்பது நம்மை காக்கும் கவசம் என்பது தெளிவு.




                                  ஒவ்வொரு மனையும், வீடும் எட்டு திக்குகள் கொண்டவை. இவை ஒவ்வொன்டிற்கும் தனிதனி இயல்புகளும், சக்திகளும் உண்டு. வாஸ்து சாஸ்திரப்படி இத்திசைகள் அமைக்கபட்டால் அனைத்து நன்மைகளும் நமது வீட்டை தேடிவரும். சில திசைகளை வளர்க்கவேண்டும்(காலியிடம்) மற்றும் சில திசைகளை குறைக்க வேண்டும்(அடைத்து கட்டுதல்).